செய்திகள்

சேலையூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2019-03-22 12:17 GMT   |   Update On 2019-03-22 12:17 GMT
சேலையூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை:

சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம்  பொன்னியம்மன் நகர் 2-வது தெருவில் வசித்துவருபவர் ராம்குமார். குரோம்பேட்டையில் உள்ள வங்கியில்  ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சுபா, இவரும் தாம்பரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக உள்ளார்.

நேற்று காலை கணவன் - மனைவி  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News