செய்திகள்

விளாத்திகுளத்தில் காண்டிராக்டரிடம் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல்

Published On 2019-03-22 11:31 GMT   |   Update On 2019-03-22 11:31 GMT
விளாத்திகுளத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

விளாத்திகுளம்:

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விளாத்திகுளம் விலக்குப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பந்தல்குடியில் இருந்து காமநாயக்கன்பட்டி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. இதனை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் தேவசகாயம் என்பதும் அவரது மோட்டார் சைக்கிளில் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது. இதற்கு முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் முறையான ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.

Tags:    

Similar News