செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வி‌ஷம் குடித்து 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

Published On 2019-03-22 10:09 GMT   |   Update On 2019-03-22 10:09 GMT
நெல்லை மாவட்டத்தில் வி‌ஷம் குடித்து 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி அடுத்த கீழ பாப்பாக்குடி காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). தொழிலாளி. இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோட்டியப்பன் (70). இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து சின்ன கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News