செய்திகள்

நாகூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2019-03-20 17:56 GMT   |   Update On 2019-03-20 17:56 GMT
நாகூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் ரதிப்ராஜன் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் நாகூர் அருகே கங்களாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் இளங்கோவனின் உறவினர்களுடன் ரதிப் ராஜன் அருகில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தான். அப்போது திடீரென ரதிப்ராஜன் குளத்தில் மூழ்கினான். உடனே சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரதிப்ராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News