செய்திகள்
ராதாபுரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனுவேல். இவரது மகள் சிவபிரியா (வயது26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி வேலைக்கு சென்ற சிவபிரியா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை.
இதுகுறித்து அவரது அண்ணன் சிவபாலன் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவ பிரியாவை தேடி வருகிறார்கள்.