செய்திகள்
கள்ளக்காதலியுடன் தகராறு- ஆந்திர வாலிபர் தற்கொலை
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஆந்திர வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார்(25). இவர் கோவை நல்லாம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் கெம்பட்டி காலனியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண் ஊருக்கு செல்வதாக கூறி உள்ளார். ஆனால் லோகேஷ்குமார் வேண்டாம் என கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த லேகேஷ் குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் பெரிய கடை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் லோகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.