செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது

Published On 2019-03-16 07:02 GMT   |   Update On 2019-03-16 07:02 GMT
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. #mkstalin #annaarivalayam

சென்னை:

தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா- ஆ.ராசா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

அப்போது தி.மு.க. சொற்பொழிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல்- சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #mkstalin #annaarivalayam

Tags:    

Similar News