செய்திகள்

வாடிப்பட்டி அருகே ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

Published On 2019-03-15 10:41 GMT   |   Update On 2019-03-15 10:41 GMT
தாயுடன் கருத்து வேறுபாடு காரணமாக வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள இடையப்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). பூ கட்டும் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சரவணனுக்கும், அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரவணன் கோபித்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் செந்தில் குமார் சம்பவத்தன்று இரவு செல்லூர் ரெயில்வே பாலம் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக செந்தில் குமாரின் சகோதரர் பாண்டி, ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News