செய்திகள்

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

Published On 2019-03-14 14:15 GMT   |   Update On 2019-03-14 14:15 GMT
பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:

தருமபுரிமாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே உள்ள சாணாரப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் சரியாக வராததால் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. 

இதனால் இன்று காலை 9 மணி முதல் பென்னாகரம் மேச்சேரி சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பெரும்பாலை  சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மேலும் பென்னாகரம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனும் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
Tags:    

Similar News