செய்திகள்

சவுகார்பேட்டை அருகே கடையில் திருடிய வாலிபர் கைது

Published On 2019-03-13 09:23 GMT   |   Update On 2019-03-13 09:23 GMT
சவுகார்பேட்டை அருகே கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் பேன்சி பொருட்கள் மொத்த விலைக் கடை வைத்திருப்பவர் விஜயன். இவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த 1 வாரத்தில் கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை திருடினார். கடந்த 3-ந்தேதி அவர் பணத்துடன் மாயமாகி விட்டார்.

இது தொடர்பாக பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர், முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பரத்குமாரை தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானுக்கு ரெயில் ஏற சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News