செய்திகள்

சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2019-03-13 06:49 GMT   |   Update On 2019-03-13 06:49 GMT
விருத்தாசலத்தில் திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று இரவு பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, நல்லூர் தமிழரசி, ஊர்நல அலுவலர் விஜயா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று இரவு அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

அவர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து, 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த திருமணத்தை நிறுத்தினர். இதையடுத்து அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்துக்கு முதல் நாள் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News