செய்திகள்

ஆதனக்கோட்டையில் ஆட்டோ, டிராக்டர் மோதல் - மர வியாபாரி பலி

Published On 2019-03-12 16:37 GMT   |   Update On 2019-03-12 17:28 GMT
ஆதனக்கோட்டையில் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மர வியாபாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த வீராளிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (28). மரம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.

சம்பவத்தன்று விஜய் ஆட்டோவில் பார்த்தீபன் புதுக்கோட்டைக்கு சென்றார். கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Tags:    

Similar News