செய்திகள்

பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் பலி

Published On 2019-03-11 14:56 GMT   |   Update On 2019-03-11 14:56 GMT
பாலக்கோடு அருகே ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிகுட்டனூர் கிராமத்தை சேர்ந்த பொன்னூகான் (வயது50) என்பவர் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து வருபவர். இவர் வழக்கம்போல் காலை வேளையில் 50-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை மொரப்பூர் வனசரகத்திற்க்கு உட்பட்ட சீங்காடு வனப்பகுதியில் மாடுகளை மேச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரத்தில் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும்போது எதிர்பாரத விதமாக அவ்வழியாக தண்ணீர் தேடிவந்து ஒற்றை யானை பொன்னூகானை தாக்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி ஆடு, மாடு மற்றும் விறகு வெட்டுபவர்கள் பாலக்கோடு வனத்துறை மற்றும் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் தேடிவரும் யானைகளால் தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்ல வனத்துறை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News