செய்திகள்

வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம்

Published On 2019-03-10 12:10 GMT   |   Update On 2019-03-10 12:10 GMT
வியாசர்பாடியில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமான சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

வியாசர்பாடி, காந்திபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் சஞ்சய் (வயது9). கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பகுதியில் படிக்கும் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜீவா, 9-ம் வகுப்பு மாணவர் சரண்ராஜ் ஆகியோருடன் நேற்று காலை பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்றான். பின்னர் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் மாயமாகி உள்ளனர்.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News