செய்திகள்

விருதுநகரில் 9 தாசில்தார்கள் மாற்றம் - நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்து புதியவர்கள் நியமனம்

Published On 2019-03-02 14:22 GMT   |   Update On 2019-03-02 14:22 GMT
விருதுநகரில் 9 தாசில்தார்கள் இடம் மாற்றப்பட்டு, நெல்லை, மதுரை மாவட்டங்களில் இருந்து புதிய தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்ட தாசில்தார்கள் சீனிவாசன் (விருதுநகர்), சந்திரசேகரன் (அருப்புக்கோட்டை), ராமசுந்தரம் (காரியாபட்டி), ரெங்கநாதன் (சாத்தூர்), ஸ்ரீதர் (சிவகாசி), பாண்டி சங்கர் ராஜா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ராமச்சந்திரன் (ராஜபாளையம்), ராஜ்குமார் (வெம்பக்கோட்டை), அறிவழகன் (திருச்சுழி) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர்.நெல்லை தாசில்தார் வெம்பக்கோட்டைக்கும், சிவகிரி தாசில்தார் கனகராஜ் ராஜபாளையத்துக்கும், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாலசம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆலங்குளம் (நெல்லை) தாசில்தார் பிரபாகரன் அருண் செல்வம் காரியாபட்டிக்கும், அம்பை தாசில்தார் சந்திரன் சிவகாசிக்கும், நாங்குனேரி தாசில்தார் தருமத்துல்லா அருப்புக்கோட்டைக்கும், வி.கே.புதூர் தாசில்தார் நல்லையா திருச்சுழிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இருந்து இளமுருகன் விருதுநகருக்கும், நவநீத கிருஷ்ணன் சாத்தூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News