செய்திகள்
பரமக்குடி அருகே வியாபாரியிடம் 10 பவுன் நகை திருட்டு
பரமக்குடி அருகே வியாபாரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 10 பவுன் நகை திருடி சென்றனர்.
பரமக்குடி:
பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.