இளைஞர்களுக்கு வழிவிட போகிறேன்- நாராயணசாமி ‘திடீர்’ அறிவிப்பு
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றும்படி அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வலியுறுத்தி வருகிறதே?
பதில்:- யார் தேர்தல் ஆணையராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல் ஆணையம்தான் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கே:- நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருமா?
ப:- இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேள்வி கேளுங்கள்.
கே:- கட்சிதலைமை அறிவுறுத்தினால் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?
ப:- கட்சித்தலைமை என்ன சொன்னாலும் செய்வேன். இதன்பிறகு தேர்தல் அரசியல் தேவையா? இனிமேல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டியதுதான். எனக்கு தனிப்பட்ட எந்த விருப்பமும், வெறுப்பும் கிடையாது. நான் ஒரு சாமியார்.
இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #congress #parliamentelection