செய்திகள்

அரியலூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-02-27 19:20 IST   |   Update On 2019-02-27 19:20:00 IST
அரியலூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தாமரைகுளம்:

தேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 28 ந்தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் வி.கைக்காட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர் பாளையம், பெரிய திருக்கோணம், செட்டித் திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார் பேட்டை, ஆதிச்சனூர், சுண்டக்குடி வாழைக்குழி, ஆண்டிப்பட்டாக்காடு, ஆலந்துறையார்கட்டளை, குணமங்கலம், கடம்பூர், பாளையக்குடி, காவனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News