செய்திகள்
கோவை அருகே மகளை கொன்று தாய் தற்கொலை
கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை மாவட்ட எல்லை பகுதியான கே.ஜி. சாவடி அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா தேவி (30).
இவர்களுக்கு சாய்மகதி (4) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜெகதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு உருவானது.
அதன் பின்னர் காஞ்சான தேவி மற்றும சாய்மகதி ஆகியோர் மாயமானார்கள். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான தாய்-மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சனா தேவியும், சாய்மகதியும் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி இறங்கி தாய் -மகள் உடலை மீட்டனர்.
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு காஞ்சனா தேவி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை மாவட்ட எல்லை பகுதியான கே.ஜி. சாவடி அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா தேவி (30).
இவர்களுக்கு சாய்மகதி (4) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜெகதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு உருவானது.
அதன் பின்னர் காஞ்சான தேவி மற்றும சாய்மகதி ஆகியோர் மாயமானார்கள். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான தாய்-மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சனா தேவியும், சாய்மகதியும் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி இறங்கி தாய் -மகள் உடலை மீட்டனர்.
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு காஞ்சனா தேவி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews