செய்திகள்

பென்னாகரம் பகுதியில் தடை செய்யப்பட்ட கள் விற்ற 2 பேர் கைது

Published On 2019-02-24 14:35 GMT   |   Update On 2019-02-24 14:35 GMT
பென்னாகரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தில் இருந்து கள் இறக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

பென்னாகரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பென்னாகரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மரத்தில் இருந்து கள் இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது. 

இதைபோன்று பென்னாகரம் அடுத்துள்ள பூனைகுண்டு காட்டு கொல்லை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News