செய்திகள்

சிவகங்கையில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-02-23 10:20 GMT   |   Update On 2019-02-23 10:20 GMT
சிவகங்கையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

விருதுநகர்:

சிவகாசி தில்லை நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 45). இவர், உறவுக்கார பெண்ணுடன் மொபட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்றார்.

ஜக்கம்மாள் கோவில் அருகே சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஜெயக் கொடி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News