செய்திகள்

தாய் கண்டித்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-02-22 16:27 GMT   |   Update On 2019-02-22 16:27 GMT
குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி தாய் கண்டித்ததால் பெயிண்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் என்கிற அய்யப்பன் (வயது 26), பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட பரந்தாமனை அவரது பெற்றோர், விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

அங்கு சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின்னர் கடந்த ஜனவரி மாதம் பரந்தாமன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு மீண்டும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

இதனால் இந்த குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி பரந்தாமனை அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பரந்தாமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News