செய்திகள்

களக்காடு அருகே நிலத்தை எழுதிவாங்கி விட்டு ரூ.20 லட்சம் மோசடி- விவசாயி கைது

Published On 2019-02-22 19:53 IST   |   Update On 2019-02-22 19:53:00 IST
களக்காடு அருகே நிலத்தை எழுதிவாங்கி விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (வயது 55). விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக படலையர்குளத்தில் உள்ள துளசிமணிக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். 

கோவில்பத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (49) என்பவர் அந்த இடத்தை ரூ.32 லட்சத்திற்கு விலைபேசி முதலில் ரூ.12 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.20 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி துளசிமணி, பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.

ஆனால் ஆறுமுகம் ரூ.20 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துளசிமணி, களக்காடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News