செய்திகள்
முசிறி அருகே விபத்தில் விவசாயி பலி
முசிறி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி:
முசிறி அடுத்த வெள்ளுர் பசுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் ஆறுமுகம் (29). விவசாயி. இவர் கடந்த 17-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளிலில் முசிறிக்கு சொந்த வேலை காரணமாக வந்துள்ளார். பின்னர் வேலைகளை முடித்து கொண்டு முசிறியிலிருந்து தண்டலைப்புத்தூர் செல்லும் சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வடுகப்பட்டி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.