செய்திகள்
ஊட்டிக்கு சென்றபோது காதலியுடன் தகராறு- கோவை வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் கோவை வாலிபர் தூக்குப்போட்டு தறகொலை செய்துகொண்டார்.
ஊட்டி:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இளையசூரியன் (வயது 26). இவர் கோவை கணேசபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இளைய சூரியனும் இவரது உறவுப் பெண்ணும் காதலித்து வந்தனர்.
காதல் ஜோடி சுற்றுலாவுக்காக மதுரையில் இருந்து ஊட்டிக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் ஊட்டி படகு இல்லம் அருகே அறை எடுத்து தங்கி ஊட்டியை சுற்றிப் பார்த்தனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அறைக்கு திரும்பினர்.
அறையில் காதல்ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த காதலி தனது செல்போனில் வைத்திருந்த இளையசூரியனின் போட்டோவை அழித்து விட்டதாக தெரிகிறது. பின்னர் ஊருக்கே திரும்பிச்செல்கிறேன் என்று கூறி புறப்பட்டு சென்று விட்டார். காதலி அறையை விட்டு வெளியேறியதும் இளையசூரியன் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் வாலிபரை சமாதானம் செய்ய காதலி திரும்பி வந்து கதவை தட்டினார். வெகுநேரம் கதவு திறக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த காதலி இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் எலி மருத்து தின்று உயிர் போகாததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இளையசூரியன் (வயது 26). இவர் கோவை கணேசபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இளைய சூரியனும் இவரது உறவுப் பெண்ணும் காதலித்து வந்தனர்.
காதல் ஜோடி சுற்றுலாவுக்காக மதுரையில் இருந்து ஊட்டிக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் ஊட்டி படகு இல்லம் அருகே அறை எடுத்து தங்கி ஊட்டியை சுற்றிப் பார்த்தனர். பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அறைக்கு திரும்பினர்.
அறையில் காதல்ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த காதலி தனது செல்போனில் வைத்திருந்த இளையசூரியனின் போட்டோவை அழித்து விட்டதாக தெரிகிறது. பின்னர் ஊருக்கே திரும்பிச்செல்கிறேன் என்று கூறி புறப்பட்டு சென்று விட்டார். காதலி அறையை விட்டு வெளியேறியதும் இளையசூரியன் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் வாலிபரை சமாதானம் செய்ய காதலி திரும்பி வந்து கதவை தட்டினார். வெகுநேரம் கதவு திறக்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த காதலி இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் எலி மருத்து தின்று உயிர் போகாததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.