செய்திகள்

நாமக்கல்லில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு - அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்

Published On 2019-02-19 18:00 GMT   |   Update On 2019-02-19 18:00 GMT
நாமக்கல்லில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
நாமக்கல்:

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் நாமக்கல் குளக்கரை திடலில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்வெட்டை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மயில்சுந்தரம் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News