செய்திகள்
கோப்புப்படம்

நளினியை சந்திக்க தாய் பத்மாவுக்கு அனுமதி மறுப்பு

Published On 2019-02-15 10:32 GMT   |   Update On 2019-02-15 10:32 GMT
வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நள்னியை சந்திக்க தாய் பத்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
வேலூர்:

சிறை விதிகளை மீறி முருகன்-நளினியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் நளினியின் தாய் பத்மா (80). இன்று நளினியை சந்திக்க வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு வந்தார். அப்போது ஜெயில் அதிகாரிகள் நளினியை சந்திக்க தடை இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறினர்.

ஜெயில் அதிகாரிகள் நளினியை பார்க்க அனுமதிக்காததால் பத்மா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் முருகனை பார்க்கவும் ஜெயிலுக்கு சென்ற அவர் அங்கும் அனுமதியில்லாததால் திரும்பி சென்றார்.

Tags:    

Similar News