செய்திகள்

275 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2019-02-14 05:46 GMT   |   Update On 2019-02-14 05:46 GMT
சென்னை தலைமை செயலகத்தில் 275 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். #Edappadipalaniswami
சென்னை:

தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது.

சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.



பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 17 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 72 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 43 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 68 பேருந்துகளும், என மொத்தம் 68 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 275 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami
Tags:    

Similar News