செய்திகள்
வாலாஜா அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 24). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.