செய்திகள்

நெகமம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து ரூ.45 ஆயிரம் பணம் பறிப்பு

Published On 2019-02-09 11:07 GMT   |   Update On 2019-02-09 11:07 GMT
நெகமம் அருகே வாலிபரை மரத்தில் கட்டி வைத்து ரூ. 45 ஆயிரத்தை பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெகமம்:

கோவை மாவட்டம் நெகமம் அடுத்துள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). இவர் அனுப்பர்பாளையத்தில் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 6 -ந்தேதி இரவு மதன் குமார் பிரவுசிங் சென்டரில் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். ஆலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டு இருந்த போது காரில் வந்த 4 பேர் மதன் குமாரை வழிமறித்தனர்.

பின்னர் அவரை அங்குள்ள மரத்தில் கட்டிப் போட்டு அடித்து உதைத்து அவரிடம் இருந்த ரூ. 54 ஆயிரத்தை பறித்தனர். பின்பு மதன்குமாரின் கட்டுகளை அவிழ்த்து விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.காயம் அடைந்த மதன்குமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மயக்கம் தெளிந்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் மதன் குமாரை மரத்தில் கட்டி வைத்து பணத்தை பறித்தது ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஹரி, பிரசாத், மடத்துக்குளம் கவின், சுந்தர கவுன்டனூர் பரத் என்பது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபரை மரத்தில் கட்டிப்போட்டு பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News