செய்திகள்

அண்ணாநகரில் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி - லாரி டிரைவர் கைது

Published On 2019-02-09 14:27 IST   |   Update On 2019-02-09 14:27:00 IST
அண்ணா நகரில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:

அண்ணாநகர் ஏ.ஏப். பிளாக்கில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.

சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர் ஏ.டி.எம். மையத்தை வாலிபர் ஒருவர் உடைப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அண்ணாநகர் ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த வாலிபர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மடக்கி பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர் சேலம் மாவட்டம் கெங்கைவல்லியை சேர்ந்த சங்கர் என்பதும், சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் ஒப்பந்த லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சங்கர் வேறு எங்காவது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News