செய்திகள்

சண்முகாபுரத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-02-08 16:54 IST   |   Update On 2019-02-08 16:54:00 IST
சண்முகாபுரத்தில் வேலைக்கு சென்ற இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் நாவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சுசிலா. இவர்களது மகள் சுமதி என்ற மேகலா (வயது 25).

இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஓட்டலுக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் மேகலா கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மேகலா இல்லை. இதையடுத்து சுசிலா தனது மகள் மாயமானது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மேகலாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News