செய்திகள்

வியாசர்பாடி மார்க்கெட்டில் 2 பெண்களிடம் நகை-பணம் பறிப்பு

Published On 2019-02-08 08:56 GMT   |   Update On 2019-02-08 08:56 GMT
வியாசர்பாடி மார்க்கெட்டில் 2 பெண்களிடம் நகை-பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி 3-வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் டில்லி. இவரது மனைவி கெஜலட்சுமி (77). நேற்று மாலை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது 3 பெண்கள் கெஜலட்சுமியை அணுகி பூஜை பொருட்கள் வாங்கித் தருவதாக கூறினர்.

நீங்கள் அலைய வேண்டாம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை.

கெஜலட்சுமியிடம் இருந்து எப்படி நகையை அபேஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நைசாக பேசி கழற்றினார்களா? மாந்திரீகம் ஏதும் செய்து நகையை பறித்தார்களா என்பதை கெஜலட்சுமியால் சொல்ல முடியவில்லை.

இதேபோல வியாசர்பாடி மெகன்சிபுரத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் பிளாட்பாரத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை காணவில்லை என்று கூறியுள்ளார். 3 பெண்கள் தன்னிடம் வந்து நைசாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.

வியாசர்படி போலீசில் 2 பெண்களும் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மார்க்கெட் பகுதயில் ரகசியமாக கண்காணிக்கின்றனர். ஆட்டோவில் வந்து கைவரிசை காட்டி செல்லும் 3 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News