செய்திகள்

அம்மாபேட்டை அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளை

Published On 2019-02-07 11:13 GMT   |   Update On 2019-02-07 11:13 GMT
அம்மாபேட்டை அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை மெயின் ரோட்டில் உள்ள பல்லவராயன் பேட்டையில் வசிப்பவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 38). இவர் பிப்ரவரி 5-ந்தேதி தனது உறவினர் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்றார்.

பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவும், பீரோவின் கதவும் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் வெள்ளிக் கொலுசு, ரொக்கப் பணம் 2 ஆயிரம், வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வெள்ளி - பணத்தை திருடிசென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் முருகேசன் மனைவி சத்யா புகார் செய்தார்.

இதன் பிறகு தனது பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம் கார்டு மூலம் அம்மாபேட்டையில் 4 முறை சுமார் ரூ.15 ஆயிரத்து 500 வரை பணத்தை கொள்ளையர்கள் எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News