செய்திகள்

நிலக்கோட்டை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-02-07 11:07 GMT   |   Update On 2019-02-07 11:07 GMT
நிலக்கோட்டை அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் நகைபறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மனைவி கருப்பாயி(வயது47). சம்பவத்தன்று வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 2 பேரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு சமயத்தில் வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் கருப்பாயி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பாயி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்றுதிரண்டனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தனர்.

இதுகுறித்து விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதேபகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுபுகுந்து ஒரு கும்பல் பெண்ணிடம் நகைபறித்துச்சென்றனர்.

மேலும் தோட்டங்களில் உள்ள மின்மோட்டார்கள் மற்றும் வயர்களை அடிக்கடி திருடிச்செல்கின்றனர். ஆனால் இதுவரை எந்த கொள்ளையர்களும் சிக்காததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே போலீசார் ரோந்துபணியை தீவிரப்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News