செய்திகள்

திண்டுக்கல் அருகே தனியார் மில்களில் தொடரும் பெண் மரணங்கள்

Published On 2019-02-06 10:18 GMT   |   Update On 2019-02-06 10:18 GMT
திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:

ஒடிசா மாநிலம் பாலிமோரி மாவட்டம் செம்பூரைச் சேர்ந்தவர் அனிஸ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனி (வயது 19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

மில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை சோனி தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இளம்பெண் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News