செய்திகள்
வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.