செய்திகள்
சிறப்பு வகுப்பால் பிளஸ்-2 மாணவன் திடீர் உயிரிழப்பு
சிறப்பு வகுப்பு காரணமாக திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த சாதிக் மகன் பாட்ஷா (வயது 17). திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அரசு பொதுத் தேர்வு என்பதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 மட்டுமின்றி 10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று காலை படிப்பதற்காக எழுந்த பாட்ஷாவின் உடல் சோர்வுடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அவரை காட்டாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில் எனது மகனுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். அதனுடன் சிறப்பு வகுப்புக்காக மிகுந்த நேரம் ஒதுக்கி படித்ததால் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வைத்தால் அவர்கள் நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றனர்.
திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த சாதிக் மகன் பாட்ஷா (வயது 17). திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அரசு பொதுத் தேர்வு என்பதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2 மட்டுமின்றி 10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்று காலை படிப்பதற்காக எழுந்த பாட்ஷாவின் உடல் சோர்வுடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அவரை காட்டாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் தெரிவிக்கையில் எனது மகனுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வரும். அதனுடன் சிறப்பு வகுப்புக்காக மிகுந்த நேரம் ஒதுக்கி படித்ததால் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தார். மாணவர்களை அவர்கள் சக்திக்கு தகுந்தவாறு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வைத்தால் அவர்கள் நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றனர்.
திண்டுக்கல்லில் பிளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.