செய்திகள்

மு.க.ஸ்டாலினின் கிராம சபைக்கூட்டம் கண்துடைப்பு நாடகம் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-02-06 09:27 GMT   |   Update On 2019-02-06 09:27 GMT
மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக்கூட்டம் கண்துடைப்பு நாடகம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPS #MKStalin

மதுரை:

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு கட்சியை தொடங்கி 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். அவரது ஆட்சியை அகற்ற முடியவில்லை. அவருக்குபின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 16 வருடம் முதல்-அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் 28 வருடம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. இது எப்படி திடீர் ஆட்சி என்று கூற முடியும்.

தற்போது மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தி, மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது.

ஆனால் இன்று திடீரென கிராம சபை கூட்டம் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வர், அமைச்சர் பதவி வகித்தபோது ஏன் நடத்தவில்லை. இது ஒரு கண்துடைப்பு நாடகம். தேர்தலை மனதில் கொண்டு மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்.

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முறைப்படி பேசி வருகிறோம். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #OPS #MKStalin

Tags:    

Similar News