செய்திகள்
கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அக்கட்சியின் தேசிய தலைமை இன்று அறிவித்துள்ளது. #Congress #ParlimentElection
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு குழுக்களை இன்று நியமனம் செய்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் கோபண்ணா, அமெரிக்கை நாராயணன் உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரச்சார குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்தக் குழுவில் ஜே.எம்.ஹாரூன், விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்பட 35 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலத்தை நியமனம் செய்துள்ளது. #Congress #ParlimentElection