செய்திகள்

கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-02-04 16:55 GMT   |   Update On 2019-02-04 16:55 GMT
கோவையில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

நாமக்கல்லை சேர்ந்தவர் ஜானகி ராமன். இவரது மகன் அரிஹரன் (21). இவர் கோவை கோவில் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புக்கு சென்று வந்தார்.

இன்று காலை மாணவர் அரிஹரன் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவர் அரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினையா? காதல் விவகாரமா? கல்லூரியில் தொந்தரவா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News