செய்திகள்

செந்துறை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2019-02-03 14:39 GMT   |   Update On 2019-02-03 14:39 GMT
செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதனங்குறிச்சி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும்  2 டாரஸ் லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒரு லாரியை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதற்குள் மற்றொரு லாரி, பொக்லைன் எந்திரமும் எடுத்து தப்பி ஓடி விட்டனர். 

அதனை தொடர்ந்து பிடிபட்ட லாரி மற்றும் டிரைவரை தளவாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சீமான் என்பவர் ஓட்டி வந்து மணல் திருட்டில் ஈடுபட்டது  தெரியவந்தது. அதனை தொடர்ந்து தளவாய் போலீசார் வழக்குபதிவு செய்து சீமானை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் ராஜாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News