செய்திகள்

திருமானூர் அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2019-02-02 16:16 GMT   |   Update On 2019-02-02 16:16 GMT
திருமானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமானூர்:

திருமானூர் அருகே  உள்ள இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் நெல்சன் (வயது25 ). இவர் இறைச்சி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சாத்த மங்கலம் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த கார், நெல்சன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நெல்சனை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நெல்சன் இறந்தார். இது குறித்து கீழப்பழுர் போலீசார் கார் ஓட்டுனர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News