செய்திகள்

பாபநாசம் அருகே 3 கடைகள் எரிந்து சாம்பல்- ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2019-01-30 14:31 GMT   |   Update On 2019-01-30 14:31 GMT
பாபநாசம் அருகே நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பாபநாசம்:

பாபநாசம் அருகே ராஜகிரி சந்திகேட் பஜாரில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் முகமது ரபீக் (வயது 48), சிராஜுதீன் (54), காய்கறி கடை நடத்தி வருபவர் சாதிக் அலி (51). நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இந்த 3 பேருடைய கடைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. 

தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மாணிக்கராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். சம்பவம் குறித்து பாபநாசம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News