செய்திகள்
விருதுநகர் கலெக்டர் சிவஞானம்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் நல உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

Published On 2019-01-29 14:06 GMT   |   Update On 2019-01-29 14:06 GMT
விருதுநகரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #VirudhunagarCollector
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு அதில் உதவி உபகரணங்கள் கோரிய 4 மனுக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

பிறதுறை தொடர்புடைய மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.415 மதிப்பிலான ஊன்று கோல்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 240 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 910 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1050 மதிப்பிலான ப்ரெய்லி கைக்கடிகாரம் மற்றும் ரூ.135 மதிப்பிலான கருப்புக்கண்ணாடியையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 315 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், தனித்துணை ஆட்சியர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். #VirudhunagarCollector
Tags:    

Similar News