செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் நேற்று 70.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. #MetturDam
சேலம்:
மேட்டூர் அணைக்கு நேற்று 150 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 243 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 70.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
மேட்டூர் அணைக்கு நேற்று 150 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 243 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 70.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam