செய்திகள்

அம்மாப்பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-01-29 09:32 GMT   |   Update On 2019-01-29 09:32 GMT
அம்மாப்பேட்டை அருகே உறவினர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மகள் சந்தியா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று சந்தியா தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாக விட்டார்.

இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபோட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News