செய்திகள்

வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த நர்சிங் மாணவி மாயம்

Published On 2019-01-28 10:55 GMT   |   Update On 2019-01-28 10:55 GMT
வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது மாமா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கோர்க்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் இரிசப்பன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் சண்முகந்தரி (வயது19). தாய்-தந்தையை இழந்த சண்முகசுந்தரி தனது மாமா ஆனந்த பாலன் பராமரிப்பில் வில்லியனூர்-பெரம்பை ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சண்முகசுந்தரி திடீரென காணவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சண்முகசுந்தரி இல்லை. 

இதையடுத்து சண்முகசுந்தரி மாயமானது குறித்து ஆனந்தபாலன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து சண்முகசுந்தரியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News