செய்திகள்

ஆலங்குடி அருகே கார் மோதி 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்- டிரைவர் கைது

Published On 2019-01-23 14:59 GMT   |   Update On 2019-01-23 14:59 GMT
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழ மழையூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (25).இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி சென்று விட்டு மீண்டும் மழையூருக்கு திரும்பி கொண் டிருந்தார். அப்போது சாலையில் அதே பகுதியை சேர்ந்த காமேஸ்வரி (21) மற்றும் சரண்யா (24) தனது குழந்தை யோகப்பிரியாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். உடனே பாண்டியன் அவர்கள் 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து மழையூருக்கு அழைத்து சென்றார். 

ஆலங்குடியை அடுத்த மேலப்பட்டி ராசிமங்கலம் அருகே சென்ற போது வடகாட்டை சேர்ந்த சையது ஹக்கிம் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சையது ஹக்கிமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News