செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரம்: கொத்தனார் குத்திக்கொலை

Published On 2019-01-21 11:06 GMT   |   Update On 2019-01-21 11:06 GMT
மதுரையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொத்தனாரை கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாப்பாளையம் அன்சாரி நகரைச் சேர்ந்த பிச்சைமணி மனைவி ஜெயந்திராணி (வயது40). இவர்களுககு மணிஇளவரசன் (24) என்ற மகன் உள்ளார். பிச்சைமணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயந்தி ராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் நடராஜன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பிடிக்காததால் மணி இளவரசன் தாயுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ஜெயந்தி ராணி வீட்டுக்கு இரவு மணிஇளவரசன் வந்தார். அப்போது அங்கு நடராஜன் இருந்துள்ளார்.

இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிஇளவரசன் கத்தியால் நடராஜனை சரமாரியாக குத்தினார்.

படுகாயங்களுடன் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிஇளவரசனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News